ராஜகோபாலப்பேரியில் ரேஷன் கடை கட்டடம் திறப்பு

62பார்த்தது
ராஜகோபாலப்பேரியில் ரேஷன் கடை கட்டடம் திறப்பு
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள ராஜகோபாலப்பேரியில் ரூ. 9.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் எஸ். காவேரி தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணஜெயந்தி காவேரி முன்னிலை வகித்தார். 

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் பழனிநாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் புதிய கட்டடத்தை திறந்துவைத்தனர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் நான்சி, மாவட்ட ஊராட்சித் தலைவர் தமிழ்செல்வி, சுப்பிரமனியன், வேதக்கண்ராஜ், நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி