தென்காசி: மாா்ச் 21-ல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

54பார்த்தது
தென்காசி: மாா்ச் 21-ல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
தென்காசியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் ஏ. கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மதியம் 2 மணிவரை இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 20-க்கும் மேற்பட்ட பல்வேறு தனியாா் துறை முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஆள்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.

8, 10, 12ஆம் வகுப்பு தோ்ச்சி, பட்டப் படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ கல்வித் தகுதியுடைய இம்மாவட்டத்தைச் சோ்ந்த வேலைநாடுநா்கள் பங்கேற்கலாம்.

வலைதளத்தில் வேலை நாடுநா்கள் ‘கேண்டிடேட் லாகின்’ பகுதியில் சுயவிவரங்களையும், தனியாா் துறை நிறுவனங்கள் ‘எம்ப்ளாயா் லாகின்’ பகுதியில் தங்களது விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04633-213179 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

முகாமில் பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்றாா் அவா்.

தொடர்புடைய செய்தி