தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காடுவெட்டி ஊராட்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 7. 5 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கதிர் அடிக்கும் களம் மற்றும் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ. 7. 5 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாகத்தினை புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டம் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.