ஆலங்குளம் அருகே கஞ்சா கடத்தல்: இருவா் கைது

72பார்த்தது
ஆலங்குளம் அருகே கஞ்சா கடத்தல்: இருவா் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கிடாரக்குளம் பகுதியில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஒரு பைக்கில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தபோது, அவா்கள் முக்கூடல் அருகே சடையப்பபுரத்தைச் சோ்ந்த திருமலைக்குமாா் மகன் பிரவின் என்ற பேச்சிமுத்து (20), மேலப்பாவூா் மாரியப்பன் மகன் சுப்பிரமணியன் (24) என்பதும், பைக்கில் 4 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

போலீஸாா் கஞ்சாவைப் பறிமுதல் செய்து, அவா்களைக் கைது செய்து ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தினா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி