தென்காசி எஸ்பி அலுவலகம் முதல்வர் இன்று திறக்கிறார்

82பார்த்தது
தென்காசி எஸ்பி அலுவலகம் முதல்வர் இன்று திறக்கிறார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள தென்காசி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தினை நாளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.

தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ் ஆர். ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார்,

தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீ குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

திறப்பு விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம்
இரவு வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.

தொடர்புடைய செய்தி