சுரண்டை அருகே விவசாயிகளை தாக்கியவா்கள் மீது வழக்கு

68பார்த்தது
சுரண்டை அருகே விவசாயிகளை தாக்கியவா்கள் மீது வழக்கு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சாம்பவர்வடகரையை சேர்ந்த விவசாயிகள் மாரிமுத்து, மாரியப்பன், கிருஷ்ணகுமார். இவர்கள் மூன்று பேரும் தங்கள் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றனர். 

மாலையில் சாம்பவர்வடகரை - பூபாண்டியபுரம் சாலையின் அருகே உள்ள அணைப் பகுதியில், மாடுகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்தனராம். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 5 பேர், தங்கள் வயலில் ஏன் மாடுகளை மேய்த்தீர்கள் எனக் கூறி விவசாயிகள் மூவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சுரண்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி