தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை அரசு கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று மாலை அரசு பஸ் டிரைவர் கோபாலகிருஷ்ணன் என்பவரை தாக்கியதாக தெரிகிறது.
இதனையடுத்து சுரண்டை பகுதியில் இயங்கும் சுமார் 70 அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் திடீரென பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் வீடு செல்ல முடியாமல் தவித்து வந்த நிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.