கனடாவின் போர்ட் ஹோப் பகுதியை சேர்ந்த கெல்லி-ஆன் ஜென்னிங்ஸ் (40) தனியார் பள்ளி ஆசிரியை ஆவார். இவர் சிறார்களை வைத்து ஆபாச படம் தயாரித்தது, 14 வயது சிறுவனிடம் அத்துமீறியது உள்ளிட்ட புகாரில் கைது செய்யப்பட்டார். இந்த குற்றங்கள் அனைத்தும் ஜூன் 2022 முதல் ஏப்ரல் 2024 வரை நடந்துள்ளதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கெல்லி மீது 18 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.