சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. காந்தி மண்டப வளாகத்தில் உள்ள சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.