தமிழ்நாட்டில் வெளியிடப்படும் அரசாணைகள் இனி தமிழில் மட்டுமே இருக்குமென தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசுப்பணியாளர்கள் அனைத்து பதிவுகளிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. துறைத் தலைமை அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் கருத்துரைகளும் இனி தமிழிலேயே இருக்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு இனி தமிழிலேயே பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.