சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் லோகநாயகி என்ற இளம் பெண் தனது காதலன் அப்துல்ஹபீஸ் என்பவரால் விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில், அப்துல்ஹபீஸை திருமணம் செய்த மதம் மாற தயாராக இருந்த லோகநாயகியை, தனது மற்ற இரண்டு காதலிகள் சுல்தானா (22), மோனிஷா (23) ஆகியோர் உதவியுடன் விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளார். திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இந்த கொலை நடந்தேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.