இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க பிரதமர் டிரம்ப் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார், போர் நிறுத்தப்பட்டதாக உறுதி செய்தார். இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையே இன்று மாலை 5 மணி முதல் போர்நிறுத்தப்படுவதாகவும், இரு நாடுகளின் டி.ஜி.எம்.ஓ., அதிகாரிகள் மே 12ஆம் தேதி பேச்சு நடத்த இருப்பதாகவும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.