இசைஞானி இளையாராஜா சமீபத்தில் லண்டன் சென்று அங்கு சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தினார். இந்நிலையில், லண்டனில் நிகழ்த்திய தனது சிம்பொனி இசை நிகழ்ச்சியை, அதே ஆர்கெஸ்ட்ரா கலைஞர்களை வைத்து ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழ்நாட்டில் இசைக்க போவதாக இளையராஜா அறிவித்துள்ளார். மேலும், “உலகம் முழுவதும் நம் பெருமையை சொல்வதைப்போல அவர்களை நம் நாட்டிற்கு அழைத்து வந்து இசை நிகழ்ச்சியை நம் மக்கள் முன்னிலையில் நடத்தப் போகிறேன். இதனை உலகமெங்கும் இருக்கும் மக்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்" என்றார்.