விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூரை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (46). பேருந்து நடத்துநனராக பணியாற்றிவரும் இவருக்கு வலது காலில் அதிக வீக்கம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சென்ற நிலையில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அதன்படி நேற்று (ஜூலை 4) அறுவை சிகிச்சை செய்த நிலையில் வலது காலுக்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.