மத்திய அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்க உள்ளது. இந்த நிறுவனம் நெட்வொர்க் மேம்படுத்தல் தொடர்பான பணிகளை சரிசெய்து வருகிறது. இதையொட்டி 13 மாதங்கள் (395 நாட்கள்) ரூ.2,399 கட்டண திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சலுகை ஒரு நாளைக்கு 2ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. பயனர்கள் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ், நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பை பெறலாம்.