பள்ளி வளாகத்தில் வன்முறையை ஆதரிக்கும் வகையில் மாணவர்கள் செய்த ரீல் வீடியோ வைரலாகி வருகிறது. இதுபோன்று ரீல் செய்யும் மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூர் வட்டம் கொல்லச்சேரி சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மாணவர்கள் கைபேசியை பள்ளிக்கு எப்படி எடுத்து வரலாம் எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.