கேரள மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வரும் 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர், வகுப்பறையில் தனியாக இருந்துள்ளார். அவரிடம் சென்ற சக மாணவர்கள், மாணவியின் ஆடைகளை கழற்றி நிர்வானமாக வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.