சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி மிரட்டப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த பாலியல் வழக்கில் மாணவியின் பெயர், முகவரியுடன் எஃப்ஐஆர் வெளியானதால் சர்ச்சை எழுந்துள்ளது. முழு விவரங்களுடன் அவசரமாக ஆன்லைனில் எஃப்ஐஆரை பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.