கொடைக்கானலில் கஞ்சா செடி வளர்த்து டூவீலரில் கடத்திச் சென்ற 19 வயது மாணவனை போலீஸார் கைது செய்தனர். பெரியகுளத்தில் படித்து வரும் தினகரன் என்ற அந்த மாணவர், விடுமுறைக்கு ஊருக்கு வரும் போது தனியார் விடுதியில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, விடுதியின் பின்பகுதியில் கஞ்சா செடியை வளர்த்து அதனை விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்ற போது பிடிபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.