'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் ஜூலை 15 ஆம் தேதி தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். நவம்பர் வரை அனைத்து மாவட்டங்களிலும் முகாம்கள் நடைபெறும். நகர் பகுதிகளில் 3,768 முகாம்கள், ஊரக பகுதிகளில் 6,232 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அரசு துறைகளின் சேவைகளை மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.