திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்றுவட்டார பகுதிகளில் Splendor பைக்குகளாக பார்த்து திருடி வந்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருட்டு வேலையில் ஈடுபட்டவர் தனசேகர் என தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து 13 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. தனசேகர் அளித்த வாக்குமூலத்தில், “Splendor பைக்குகளை விற்பனை செய்வது எளிதானது. அதன் நம்பர் பிளேட்டை மாற்றிவிடுவேன்" என கூறினார்.