அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் மாணவியின் அடையாளங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை தொடங்கி உள்ளது. இதையடுத்து, அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகிய 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவிடம், பாலியல் வன்கொடுமை வழக்கு ஆவணங்கள், எப்.ஐ.ஆர் வெளியான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது.