சீனாவில் வீட்டுப்பாடம் செய்யாமல் இருந்ததற்கு தந்தை கண்டித்ததால், அவர் போதைப்பொருள் வைத்திருப்பதாக 10 வயது சிறுவன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அருகில் உள்ள கடைக்குச் சென்று போலீசாருக்கு தகவல் அளித்துவிட்டு, எதுவும் தெரியாததுபோல் சிறுவன் வீட்டிற்குள் இருந்து உள்ளார். வீட்டில் சோதனை செய்த போலீஸ் அபினை பறிமுதல் செய்து தந்தையை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.