கடன் தருவதாக வரும் குறுஞ்செய்திகளை பெண்கள் நம்ப வேண்டாம் என அமைச்சர் கீதா ஜீவன் எச்சரித்துள்ளார். திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய கீதா ஜீவன், "கடன் தருவது போல் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகிறது. அதனை கிளிக் செய்யும் பொழுது நமது தகவல் அனைத்தும் திருட வாய்ப்புள்ளது. பெண்கள் அனைவரும் 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை வைத்திருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.