சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் தீவிரம்

56பார்த்தது
திருப்பூர்: உடுமலை அருகே குடிமங்கலம் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக வெங்காயம் அறுவடை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. வளர்ச்சி தருணத்தில் அதிக வெயிலால் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டது. சின்ன வெங்காயம் சாகுபடிக்கு விதை நாற்று, மருந்து, உரம் என இடுபொருட்கள் செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியாமல் மழை துவங்கியது. அறுவடை தாமதத்தால் சின்ன வெங்காயத்தை இருப்பு வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.40க்கு விற்பனை ஆகிறது.

தொடர்புடைய செய்தி