அமித்ஷாவை கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம்

71பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட செயலாளர் தலைமையில் நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநிலங்களவையில் டிசம்பர் 17 அன்று நடந்த அரசியல் சாசனம் மீதான விவதத்தின் போது பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "தற்போது 'அம்பேத்கர், அம்பேத்கர்' என்று பேசுவது பேஷனாகி விட்டது. இப்படி சொல்வதற்கு பதிலாக கடவுளின் நாமத்தை பல முறை உச்சரித்திருந்தால், அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும், " என்று கூறினார். இது ஒரு பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் படத்தை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர். மேலும், அமித்ஷா கருத்து குறித்து பல்வேறு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்த நிலையில், இன்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் திமுக அறிவித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தி வருகிறது இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அண்ணா சாலை அருகே விடுதலை சிறுத்தை கட்சியினர் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மத்தியில் அமித்சாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி