திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை திருத்தேரோட்டம்

59பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வரலாற்று சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற பிரான்மலையில் பாரி மன்னன் ஆண்ட பகுதியில் திருக்கைலாய பரம்பரை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை பெருந்திருவிழா கடந்த (மே-1) வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் பத்து நாள் பெருந்திருவிழா விமர்சையாக துவங்கியது. அதை தொடர்ந்து தினந்தோறும் சுவாமி திருவீதி உலாவும் வைபவமும் விமர்சையாக நடைபெற்றது.

தொடர்ந்து முக்கிய நிகழ்வான இன்று ஒன்பதாம் நாள் திருத்தேரோட்ட விழாவில் அதிகாலை சுவாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 5. 50 மணியளவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தேர் வடம் பிடித்து தேரோட்டம் விழாவை தொடங்கி வைத்தார். ஐந்து தேர்களில் விநாயகர் முருகர் பிரியாவிடை உடனான திருக்கொடுங்குன்றநாதர் அன்னை குயிலமுதநாயகி அம்மன் ஆகியோர் தனித்தனி நான்கு பெரிய தேர்களில் எழுந்தருளினர். சிறிய சப்பரத்தில் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் என ஐந்து தேர்களில் சுவாமிகள் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து நான்கு ரத வீதிகளில் திருவீதி உலா வந்தனர். தொடர்ந்து சரியாக மாலை 6. 30 மணி அளவில் திருத்தேர் ஒன்றன் பின் ஒன்றாக நிலையை அடைந்தது.
தேர் நிலையை அடைந்ததும் பக்தர்கள் தங்கள் உறவுகள் மீது வர்ணம் அடித்தும் வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களை சூறைவிட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி