அரளிக்கோட்டையில் புரவி எடுப்பு திருவிழா

69பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள அரளி கோட்டை கிராமத்தில் கோஷ்டியப்ப அய்யனார் திருக்கோவிலுக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை புரவி எடுப்பு திருவிழா நடத்துவது வழக்கம். காப்பு கட்டுகளுடன் துவங்கிய திருவிழாவில் கடந்த வாரங்களில் குதிரை செய்வதற்கு கிராம மக்களால் பிடிமன் கொடுத்தல், சேங்காய் வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் திருவிழாவாக நடத்தப்பட்டது. நேற்று கிராம மக்களால் நேர்த்தியாக செய்யப்பட்ட புரவி குதிரைகளை சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக புரவி பொட்டலுக்கு கொண்டு வந்தனர். இன்று குதிரைகளுக்கு கிராம மக்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்ரீ கோஷ்டியப்ப அய்யனார் கோவிலில் வைக்கப்பட உள்ளது. திருவிழாவில் கலந்து கொண்ட சுற்றுவட்ட கிராம மக்கள் அய்யனாருக்கு செய்யப்பட்ட சிறப்பு பூஜைகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி