மாவட்டம் முழுவதும் அதிகபட்சமாக 22 1. 30மில்லி மீட்டர்மழைபதிவு

70பார்த்தது
கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, மானாமதுரை , சிவகங்கை, திருப்புவனம், மற்றும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பிற்பகலுக்கு பின் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், திடீரென கனமழை வெளுத்து வாங்கியது.
சிவகங்கை பகுதியில் 24 மில்லி மீட்டரும் திருப்புவனம் பகுதியில் 40. 60 மில்லி மீட்டர் மழைப்பதிவும் திருப்பத்தூர் பகுதியில் 2. 50மில்லி மீட்டர் மழை பதிவும் காரைக்குடி பகுதியில் 6. 80 மில்லி மீட்டர் மழைப்பதிவு தேவகோட்டை பகுதியில் 25. 00 மில்லிமீட்டர் மழைப்பதிவு இளையான்குடி பகுதியில் 36. 00மில்லி மீட்டரும் காளையார் கோவில் பகுதியில் 26. 40மில்லி மீட்டரும் மானாமதுரை பகுதியில் 60 மில்லி மீட்டர்
சராசரியாக மாவட்டம் முழுவதும் 24. 39 மில்லி மீட்டர் மழை பதிவும் அதிகபட்சமாக 221. 30 மில்லிமீட்டர் மழை பதிவும் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் இன்று காலை சுமார் 11. 30 மணிஅளவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி