சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஜல்லிக்கட்டு காளைக்களுக்கான வண்ணமிகு அலங்காரத்தோடும் சலங்கை சத்தத்துடன் மணி மாலை கலைநயத்துடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. கண்கவரும் வண்ண வண்ண உள்ளன் நூல்களைக் கொண்டும் சப்தம் மிகுந்த சலங்கைகள் கோர்க்கப்பட்ட தயாரிக்கப்படும் இந்த மணி மாலைகள் தைப்பொங்கலில் ஜல்லிக்கட்டு காளைகளின் கழுத்தில் அணிவித்து அழகு பார்ப்பது ஜல்லிக்கட்டு உரிமையாளர்களின் வழக்கம். திண்டுக்கவில் தோல் (லெதர்) வாங்கி குஜராத்தில் உள்ளன்நூல் வாங்கி அரியக்குடிமணி, வெங்கநாயக்கன்பட்டிமணி, ஆறாவயல்மணி, எட்டுஅறுவைமணி , என்று பலதரப்பட்ட மணிகளை நுனுக்காக கோர்த்து கைத்தையல் மூலம் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. ஒரு மணியின் விலை ரூபாய் 2000 முதல் 8000 வரை விற்கப்படுகிறது இந்த மணிமாலைகளை வாங்க ஜல்லிக்கட்டு காளைஉரிமையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிங்கம்புணரிக்கு வருகை தருகின்றனர்.