சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கட்டுக்குடி பட்டி பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி (35) வைஷ்ணவி (24) தம்பதியினர் இவர்களுக்கு திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை என கூறப்படுகிறது இந்நிலையில் வீட்டில் இருந்தவர் திடீரென மாயமாகியுள்ளார் அக்கம் பக்கத்தில் தேடி கிடைக்காத நிலையில் அவரது கணவர் உலகம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் தயாளன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.