சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் கிராமத்தில் திருக்கோவிலின் திருப்பாற்கடலில் குளிக்கச் சென்று எதிர்பாராத விதமாக உயிரிழந்த இரண்டு சிறார்களின் குடும்பத்திற்கு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அவர்களுடன் நேரில் சென்று, இறப்பு நிவாரண தொகையாக தலா ரூ. 1.00 இலட்சத்திற்கான காசோலையினையும் மற்றும் தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 2.00 இலட்சம் உதவித்தொகையினையும் வழங்கி ஆறுதல் கூறினார்.