சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கான பாலியல் தொந்தரவுகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முதன்மை மாவட்ட நீதிபதியின் வழிகாட்டுதலின் படி சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கான பாலியல் தொந்தரவுகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் அரசு மகளிர் கல்லூரியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி எம். பரமேஸ்வரி தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
முகாமில், சென்னை இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் வழக்குரைஞர்கள் ரோஷன் ராஜன், ராஜா ஆகியோர் பங்கேற்று பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கான பாலியல் தொந்தரவுகளுக்கு எதிரான சட்டங்கள் குறித்த பயிற்சி அளித்தனர்.
குற்றவியல் நீதித்துறை நடுவர்(எண்-1) நீதிபதி அனிதா கிறிஸ்டி, சிங்கம்புணரி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிபதி அபர்ணா, காரைக்குடி விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி செல்வி. ஜெயபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.