கழிவு நீர் ஓடுவதால் சுகாதார சீர்கேடு

62பார்த்தது
சிவகங்கை மாவட்டம்
மானகிரிக்கு உட்பட்ட
தளக்காவூரின் தெருக்களில் கழிவுநீர் நிரம்பி சாலையில் ஓடுகிறது. இதில் நடந்து செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் பலவித நோய்களுக்கு ஆளாகி வருவதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பலமுறை ஊராட்சி நிர்வாக அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட நிர்வாகம் என பல இடங்களில் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறும் பகுதி வாசிகள் இனிமேலாவது உடனடியாக கழிவு நீரை அப்புறப்படுத்தி சுகாதாரம் காக்க வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி