சிவகங்கை மாவட்டம், மார்ச் 2025-இரண்டாம் வாரத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 18.03.2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்துகொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.