சிவகங்கை: மஞ்சுவிரட்டு போட்டி; 28 பேருக்கு காயம்

70பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே, என். புதூரில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை, வெள்ளாளக்கருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். 

அதே போன்று இந்த ஆண்டும் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. முன்னதாக வெள்ளாளக்கருப்பர் கோயிலில் வழிபாடு நடத்தி விட்டு கிராமத்தார்கள், சாமியாடிகள் மற்றும் கோயில் காளைகளுடன் ஊர்வலமாக மஞ்சுவிரட்டு போட்டலுக்கு வருகை தந்தனர். தொடர்ந்து அதிகாரிகள் உறுதிமொழி வாசிக்க மஞ்சுவிரட்டில் கலந்து கொள்ளும் வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். 

இதனை அடுத்து தொழுவிலிருந்து முதலில் கோயில்காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன்பின்னர் வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக 185 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஒரு சுற்றுக்கு 25 வீரர்கள் என களம் இறங்கிய வீரர்கள் 50 பேர் கலந்து கொண்டு தங்களது வீரத்தை பறைசாற்றும் விதமாக மாடுகளை அடக்க முற்பட்டனர். 

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், காளையர்களை மிரட்டியபடி பிடிபடாமல் சென்ற காளைகளுக்கும் சில்வர் அண்டா உள்ளிட்ட சில்வர் பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. முன்னதாக கட்டுமாடுகளாக 300-க்கும் மேற்பட்ட காளைகள் மஞ்சுவிரட்டு திடலில் ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. இக்காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 28 பேர் காயமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி