நில வரைபடத்தில் குளறுபடி தகராறில் ஈடுபட்ட பெண்

83பார்த்தது
சிவகங்கை அருகே முத்துப்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்த தனபாலன் மனைவி ராஜேஸ்வரி. இவர் தனது மகளின் படிப்பிற்காக தனியார் வங்கியில் கல்விக்கடன் பெறுவதற்கு கடந்த 2017 -ஆம் ஆண்டு வாங்கிய நிலத்தை அடமானமாகக் காட்ட முயன்றார். அப்பொழுது நிலத்தின் பட்டா மற்றும் சிட்டா சரியாக இருந்தாலும், நிலத்தின் வரைபடம் மட்டும் வேறு ஒரு இடத்தை சுட்டிக்காட்டும் வகையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ராஜேஸ்வரி, சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதன்கிழமை நேரில் வந்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் வரைபடம் குறித்த குளறுபடியை சரிசெய்து தருமாறு முறையிட்டார். அப்பொழுது, இது தொடர்பாக புகார் மனு அளிக்க வேண்டுமென அலுவலர்கள் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி, வட்டாட்சியர் அலுவலக வாசலில் நின்று தனக்கு நியாயம் வேண்டுமென சப்தமிட்டு தகராறில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில மாதங்களாக கணினியில் இது போன்ற பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாகவும், இதனால் பொதுமக்கள் அனைவரும் அலைக்கழிக்கப் படுவதாகவும் பொது மக்கள் குற்றம்சாட்டினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி