சிவகங்கை அருகே கண்டாங்கிபட்டி கிராமத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 6 பேர் காயமடைந்தனர்.
சிவகங்கை அருகே உள்ள கண்டாங்கிபட்டி கிராமத்தில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
இந்த வடமாடு மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 15 காளைகளும் அதேபோல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 135 வீரர்களும் பங்கேற்றனர்.
வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள, மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட காளையை 25 நிமிடத்திற்குள் 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் அடக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது இந் நிலையில், முதலில் களம் இறங்கிய காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் 6 பேர் காயமடைந்தனர்.
போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களையும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களையும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு ரொக்கப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். போட்டியில் மாடு முட்டியில் 4 வீரர்கள் காயமடைந்தனர். இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை கண்டாங்கிபட்டி, தமராக்கி, குமாரபட்டி, இடையமேலூர், கூட்டுறவுபட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த வடமாடு மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் போட்டியினை உற்சாகமாக கண்டுகளித்தனர்.