ஓபிஎஸ் அணியினர் சுவரொட்டிகள் ஒட்டியதால் பரபரப்பு

568பார்த்தது
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக அணியினர் பெரும் சரிவை கண்டனர். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர் அதிமுகவினர் ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுத்தனர். இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம் என சிவகங்கை நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டி அழைப்பு விடுத்துள்ளனர். அதில் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் கட்டிக்காத்த இயக்கம் பிரிந்து கிடப்பதால் சரிவை சந்தித்துள்ளதாகும், இதனால் அதிமுக தொண்டர்கள் கண்ணீர் வடிப்பதாகவும் வாசகங்கள் சுவரொட்டியில் எழுதப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டியால் அதிமுக வட்டத்தில் இன்று மதியம் சுமார் 12 மணி அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர் அதிமுகவில் இனைய வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சனங்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி