சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்கள் போராட்டம்

77பார்த்தது
சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் கண்ணுச்சாமியின் தலைமையில் ஓய்வூதிய உயர்வுக்காக தனித்துவமான முறையில் போராட்டம் நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் பட்டுத்தேவனின் 04. 04. 2025 நாள் தீர்ப்பின்படி, தேர்தல் வாக்குறுதி 313-ன் கீழ் ரூ. 6750 குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். மேலும், 2. 57 பெருக்கல் காரணியின்படி 01. 10. 2017 முதல் பணப்பலன் கிடைக்குமாறு ஓய்வூதியத் திருத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான அமல்படுத்தல் நடவடிக்கையை வலியுறுத்தி, போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முகத்தில் பட்டை நாமம் இட்டு, மடிப் பிச்சை எடுத்து கவனத்தை ஈர்த்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி