ஆந்திரா மாநிலம், விஜயநகரம் அருகேவுள்ளது மனியம் மாவட்டம், பார்வதிபுரம் கிராமத்தை சேர்ந்த கிஷா என்பவரது மகன் அப்பாராவ் என்கிற கொண்டக்காரி சுக்கா.
இவருக்கு சீத்தாம்மா என்கிற பெண்ணுடன் திருமணமாகி தம்புதோரா சாயம்மா என்கிற பெண் குழந்தையும் இருந்துள்ளது கட்டிட தொழிலாளியான அப்பாராவ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தனது நண்பர்களுடன் சென்னை ரயில் நிலையத்தில் டீ க்குடிப்பதற்காக இறங்கியவர் பாண்டிச்சேரி செல்லும் ரயிலை தவறவிட்டதுடன் ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் மாறுதலாக ஏறி பயனித்தவர் செல்லும் ஊர் தெரியாமல் சிவகங்கை ரயில் நிலையத்தில் இறங்கி நின்றவரை சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அடுத்துள்ள கடம்பங்குளம் கிராமத்தை சேர்ந்த மலைக்கண்ணு என்பவர் இவரை பார்த்து வேலை தருவதாக கூறி அழைத்து சென்று ஆடுகளை மேய்க்கவைத்துள்ளார்.
அழைத்து சென்ற மூன்று ஆண்டுகளில் மலைக்கண்ணு இறந்துவிடவே அதனை தொடர்ந்து அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாத்துரை என்பவர் இவரை அழைத்து சென்று அதேபோல் ஆடுமேய்க்க வைத்துள்ளார். மேலும் கடந்த 17 ஆண்டுகளாக அப்பாராவிற்கு ஊதியம் எதுவும் வழங்காமல் வெறும் உணவு மட்டுமே வழங்கியதுடன் அப்பாராவ் ஊருக்கு செல்ல அனுமதி கேட்டும் வழங்காமல் ஊதியத்தை அப்பாராவின் ஊதியத்தை வங்கியில் செலுத்தி வருவதாகவும் கூறி கொத்தடிமையாக வைத்து வேலை வாங்கியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அப்பாராவை குடும்பத்தினருடன் சேர்த்தனர்.