மாற்றுத்திறனாளி முதியவர் தீக்குளிக்க முயற்சி

51பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மேலக்காரக்குடி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் தியாகராஜன். மாற்றுதிறனாளியான இவருக்கு சொந்தமான பட்டா இடம் மூப்பையூரில் உள்ளது. இதற்கு மூப்பையூர் ஊராட்சியில் வரி ரசீது போடவில்லை என கூறப்படுகிறது. அந்த இடத்தில் கடை அமைப்பதற்கான புதிய கட்டிடத்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தியாகராஜன் கட்டியுள்ளார். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பலமுறை மனு கொடுத்தும் வரி ரசீது கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் புதிய கட்டிடத்திற்கு மின் இணைப்பு பெறாமல் வாழ்வாதாரம் பாதிப்பதாக முதியவர் தியாகராஜன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் விரைந்து சென்று தடுத்து நிறுத்தி முதியவரை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து சென்றதால் ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி