சிவகங்கை மாவட்டத்தில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் 71வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஆலோசனை கூட்டம், மாவட்ட கழகம் மற்றும் அம்மா பேரவை, இளைஞர், இளம்பெண் பாசறை சார்பில் சிவன் கோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு. PR. செந்தில் நாதன் அவர்கள் தலைமையாற்றினார். நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், மாவட்ட பாசறை செயலாளர் பிரபு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உமாதேவன், குணசேகரன் மற்றும் ஒன்றிய, பேரூர் கழக சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில். செந்தில் நாதன் எம். எல். ஏ. , பேசுகையில்:
புரட்சி தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்த வேண்டும். முதியோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் மையங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் வழங்க வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். அனைவரும் மகிழ்ச்சியுடன் திருவிழாவாக இந்த பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும்” எனக் கூறினார்.