சிவகங்கை நகராட்சியில் பொது பயன்பாட்டிற்கு பலலட்சம் ரூபாய் மதிப்பில் கனரக வாகனம் ஒன்று வாங்கப்பட்டது. இந்த வாகனம் பயன்படுத்தப்படாமல் நகராட்சி வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து அறிந்த நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் பயன்பாடற்ற வாகனத்தை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தார்.
அதன் அடிப்படையில் வாகனத்தை குடிநீர் வினியோகம் செய்ய நகர் மக்களின் பயன்பாட்டுக்கு நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகள் நகரசபை தலைவர் கிருஷ்ணாராம், மேலாளர் கென்னடி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெய காந்தன், ராமதாஸ், விஜயகுமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.