சிவகங்கை: மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு

63பார்த்தது
சிவகங்கை: மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, சிங்கம்புணரி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் கள்ள சந்தையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்ததில் 62 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அர்ஜுனன், ராமன், போதுபாண்டி, ரமேஷ் ஆகிய 4 நபர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி