தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6 தேதி துவங்கி ஏப்ரல் 20ம் தேதி நடைபெற்றது, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு
முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் ஆண்கள் பெண்கள் என 17732 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில்-17294 தேர்ச்சி பெற்றனர். சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 97. 53 சதவிதம் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மேலும் அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில்
96. 38சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.