மானாமதுரையில் நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் லாரிகள்

57பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சிப்காட் பகுதியில் நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு முன்பு லாரிகளில் நீண்ட வாரிசையில் காத்துகிடக்கின்றன. இந்த ஆண்டு பெய்த பருவ மழையால் நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகளிடம் இருந்து நுகர்பொருள் வாணிப கழகம் நிர்ணயித்த இலக்கை விட கொள்முதல் அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் நெல் கொள்முதல் தடைபட்டது. இந்நிலையில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றபட்டு சேமிப்பு கிடங்கு முன்னர் நீண்ட வரிசையில் கடந்த 3 நாட்களாக காத்து கிடக்கின்றன. நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் நெல் மூட்டைகளை இறக்க போதுமான லோடு மேன்கள் இல்லை என கூறப்படுகிறது.
இதனால் கூடுதல் தொழிலாளர்களை நியமிக்க ் வேண்டும், கூடுதல் சேமிப்பு கிடங்குகளை அமைக்க வேண்டும் என்றும், அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, நெல் மூட்டைகளை சேதமடையாமல் கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி