பி. எம். கிசான் திட்டத்தில் சிறப்பு முகாம்

52பார்த்தது
பி. எம். கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், தகுதியான அனைத்து விவசாயிகளும் பயனடைய, மே 31 வரை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவகம், பொது சேவை மையங்கள் மற்றும் இந்திய அஞ்சல் வங்கிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

திட்டத்தின் 19-வது தவணை தொகை ஏற்கனவே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும், சில விவசாயிகள் ஆதார தகவல், e-KYC பதிவு ஆகியவற்றை பூர்த்தி செய்யாததால், அவர்களுக்கு சில தவணை தொகைகள் வழங்கப்படவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும், 2, 279 விவசாயிகள் ஆதார் எண்ணை வங்கியில் இணைக்காததும், 2, 839 விவசாயிகள் e-KYC செய்யாததும் காரணமாக, தொகைகளை பெற முடியவில்லை.

இதற்காக, உரிய விவரங்களை சீர்செய்து, தவணைகளை பெற முகாம்களில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், திட்டத்தின் பயனாளிகள் இறந்துவிட்டால், அவர்களது தகவல் வேளாண்மை துறைக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். இறந்த பிறகும் தொகை பெற்றால், அந்த தொகை வாரிசுகளிடமிருந்து மீட்கப்படும். வாரிசுகள், தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

தற்போது விவசாயர்களுக்கான தனி அடையாள எண் வழங்கப்பட்டு வருகின்றது. எண்ணை உள்ள என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்இன்று இரவு சுமார் 7மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி