சிவகங்கை: முறைகேடுகளை ஆய்வு செய்ய தனி குழு அமைக்க கோரிக்கை

52பார்த்தது
சிவகங்கை மாவட்டம் முழுவதும் 73 நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வரும் நிலையில் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடப்பதாக மானாமதுரை பகுதியைச் சேர்ந்த விவசாயி மற்றும் சமூக அலுவலர் விக்ரம் செல்வா கூறுகையில்:நெல் மூட்டைகளை இறக்குவதற்கு போதிய பணியாளர்கள் இல்லாததால் நெல் கொள்முதல் செய்வது தாமதமாகிறது. 

இதற்கு தீர்வாக நுகர் பொருள் வணிக கழகத்தில் இயந்திரமயமாக்கல் வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளை ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்க வேண்டும். தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி