சிவகங்கை மாவட்டம் மானாமதுரை துணை மின் நிலையத்தில் 11.6.2025 புதன்கிழமை அன்று பராமரிப்பு பணி காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.
இதனால் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மானாமதுரை, சிப்காட், இராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, முனைவென்றி, குறிச்சி, கச்சாத்தநல்லூர், நல்லாண்டிபுரம், சங்கமங்கலம், அன்னவாசல் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் இன்று மாலை சுமார் 6 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.